பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61


கிட்கிந்தா காண்டம்

படலங்கள் சுருக்கம்

1. பம்பை வாவிப் படலம்

கம்பன் இப் படலத்தில் பம்பைப் பொய்கையின் தோற்றம்; அதில் நிகழும் செயல்கள் ஆகியவற்றை முதலில் கூறிவிட்டு சீதையின் நினைவால் இராமன் புலம்புவதையும், சீதையைத் தேடி மேலும் செல்லுதல் பற்றியும் சித்தரிக்கிறார்.

2. அநுமன் படலம்

இவ்வாறு சீதையைத் தேடிச் செல்லும் இராம லட்சுமணனைக் கண்டு சுக்ரீவன் ஓடி ஒளிகிறான். அநுமன் தசரதனின் மக்களைப் பார்க்கிறான். இவர்களை அணுகி வரவேற்கிறான். தன்னைப் பற்றியும் கூறுகிறான் அநுமன். மறையவனாக வந்து அநுமன் இராமனின் திருவடிகளை வணங்குகிறான். ‘இராமன் அது முறையோ?’ எனக் கேட்க, அநுமன் விடை பகர்ந்து பெரிய வானர உருக்கொண்டு நிற்பதைக் கண்டு இருவரும் வியக்கின்றனர். இராமன், சுக்கிரீவனை அழைத்து வரும்படி கூறுகிறான்.

3. நட்புக்கோட் படலம்

அநுமன் சுக்ரீவனிடம் இராமனின் சிறப்புக்களை கூறி, அவனை இராகவனிடம் அழைத்து வருகிறான். இராமனும் அவனுடன் உரையாடுகிறான்: இருவரும் விருந்துண்கின்றனர். அப்போது இராமன், ‘நீயும் உன் மனைவியைப் பிரித்துள்ளாயோ?’ என அவனை வினவுகிறாள். அநுமன் மூலம் சுக்கிரீவனுக்கும் வாலிக்கும் பகை ஏற்பட்டக் காரணத்தையும் அறிகிறான் இரகு வீரன். இராமன் கோபமுற்று வாலியைக் கொல்வதாகச் சூளுரைக்கிறான். சுக்கிரீவன் இராமனின் ஆற்றலை அறிய ஆவல்கொள்கிறான்.

4. மராமரப் படலம்

சுக்கிரீவன், இராமனை மராமரங்களுள் ஒன்றை அம்பினால் எய்யவேண்டுகிறான். இராமனும் அவ்வாறே செய்யவும், சுக்கிரீவனும் வாணர வீரர்களும் மகிழ்கின்றனர்,