பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

யும் சொல்கிறான். தன் மோதிரத்தையும் அநுமனிடம் கொடுத்தனுப்புகிறான்.

13. பிலம் புக்கு நீங்கு படலம்

வானரர் நான்கு திசையிலும் சீதையைத் தேடி செல்கின்றனர். வழியிலே அனுமன் முதலானோர் ஒரு வெம்மை மிக்க பாலையை அடைகின்றனர். வெம்மைத் தாங்காத வானரர் ஒரு இருண்ட பள்ளத்தில் புகுந்து விடுகின்றனர். அநுமன் அவர்களைத் தன் வாலைப் பற்றி, அங்கிருந்து நீங்கி வரச் செய்கின்றான். சுயம்பிரபை தன் வரலாற்றை அவர்களுக்குக் கூறுகிறாள். சுயம்பிரபை பொன்னுலகம் எய்துகிறான்.

14. ஆறு செல் படலம்

செல்லும் வழியில் அவர்கள் கடக்கும் பற்பல காடுகள், நாடுகள், வனங்கள், மலைகள், ஆறுகள் பற்றியும் கூறும் இப் படலத்தில் அங்கதனுக்கும் துமிரன் என்ற அரக்கனுக்கும் நடந்த போர் பற்றியும் கூறுகிறார் கம்பர். இப் படலத்திலேயே சாம்பவான் துமிரனின் கதையைக் கூறுகிறான்.

15. சம்பாதிப் படலம்

தென்கடலை அடைகின்றனர் வானரர். சம்பாதியை அங்குச் சந்திக்கின்றனர். தன் தம்பி சடாயு இறந்ததை அறிந்த சம்பாதி வருந்தி புலம்புகிறான். சீதையின் இருப்பிடத்தைச் சம்பாதி தெரிவிக்கிறான். இராவணனின் மாயங்கள் பற்றியும் விவரிக்கிறான்.

16. மகேந்திரப் படலம்

அடுத்து உருவெடுக்கிறது மிகப் பெரிய பிரச்னை. “கடலைக் கடப்போர் யார்?” என்பதே அது. சாம்பவான் அதுமனைப் பார்த்து ‘அவனே அதைச் செய்ய முடியும்!’ என்று புகழ்ந்துப் பாராட்ட அநுமன் இலங்கைச் செல்ல உடன்பட்டு கடல் தாவ பெருவடிவு கொள்கிறான்.