பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84


குழல், யாழ் முதலிய இசைக் கருவிகளும் தோல்வி அடையக்கூடிய இனிய குரலில் கிளியுடன் அமர்ந்து பேச்சுப் பழக்குகிறார்கள் பெண்கள். அந்த மாடத்தின் சுவர்களிலே, அவர்கள் போலவே பல பிம்பங்கள் பிரதிபலிக்கின்றன. எது உண்மையுருவம் எது பிரதிபிம்பம் என்று காணமுடியவில்லை. அப்படிப்பட்ட பளபளப்பு வீசும் சுவர்களை - கண்ணாடிபோலும் சுவர்களைக் கொண்டன அம்மாடங்கள்.

***

குழலும் வீணையும் யாழும் என்று இனையன - குழல், யாழ், வீணை என்று கூறப்படும் இத்தகைய இசைக் கருவிகள்; குழைய - தளர்ந்துபோக; மென் மழலை மொழி - மெல்லிய மழலைச் சொற்களை; இருந்து கிளிக்கு அளிக்கின்ற மகளிர் - தாம் இருந்துகொண்டு கிளிக்குப் பழக்குகின்ற மாதர்கள்; சுழலும் நல் நெடும் தடமணி சுவர்தொறும் - ஒளி சுற்றி வருவனவும் நல்ல இலக்கணங்கள் அமைந்தனவுமாகிய நீண்டு உயர்ந்த மணிகள் பதித்த சுவர்கள் தொறும்; துவன்றும் நிழலும் - ஒன்று பலவாகத் தோன்றும் தம் நிழல்களையும்; தம்மையும் - தம்மையும்; மெய்ம்மை நின்று அறிவு அருநிலைய - உண்மையாக அறிய முடியாத நிலையில் இருந்தன அம்மாடங்கள்.

***


இனைய மாடங்கள்
        இந்திரற்கு அமைவர எடுத்து
வனையும் மாட்சிய என்னில்
        அச் சொல்லும் மாசி உண்ணும்
அனையவாம் எனின்
        அரக்கர் தம் திருவுக்கும் அளவை
நினையலாம் அன்றி உவமையும்
        அன்னதா நிற்கும்.