பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

187

போற்றுமொரு காவியத்தைப்
     புவிக்களிக்கக் கூடாதோ?
வீர புருஷனென
     விளக்கியந்த ராமனையே
பாரறிய வான்மீகி
     படைத்திருந்தும் காவியத்தில்,
மூவர்க்கும் மேலான
     முதலவன் இவனென்றும்
நாவாலே ராமனென
     நாளுந் துதிசெய்தால்
நாடுகின்ற பொருள்போகம்
     ஞானமொடு புகழும்
வீடுதேடி வருமென்று
     விரித்துவிட்டான் கம்பனுமே.
இப்படியெல்லாம் சொல்லி
     இந்தத் தமிழகத்தில்
தப்பிதமாய்ப் பிரச்சாரம்
     தமிழ் மொழியில் செய்ததனால்
சிவனடியே மறவாத
     சிந்தையொடு வாழ்வதற்கு
இவனாலே எவ்வளவோ
     ஏதம் விளைந்துளது
இதனாலே கம்பனையே
     என்பகைவன் என்றுசொல
கதத்தோடு என்னுடைய

     கடன்என்றே குறிக்கின்றேன்

(என்று ஒரு போடு போட்டார். போட்டவர் அழுத்தமான சைவர். சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று எண்ணுகின்றவர், பேசுகின்றவர். இவருக்குப் பதில் சொல்லவோ நான் துணியவில்லை. அதற்குள் ஆரம்பித்தார் மற்றொருவர்)