பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

(Socialogy) என்பர். இந்தச் சமூக இயலில் ஏறக்குறைய எல்லா இயல்களையும் அடக்கலாம்; அவ்வளவு பெரியது இது.

ஒரு காலத்தில் சமூகம் என்பது, ஐவர் அல்லது ஐம்பதின்மரைக் கொண்டது என்பதாகச் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். இப்போதோ சமூகம் என்பது, ஐந்நூறுகோடியினரைக் கொண்டது என்று சொல்லக் கூடிய நிலைமை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. தனிமாந்தர் கோடிக் கணக்கில் சேர்ந்ததே சமூகம், என்னும் கருத்து இப்போது அறிய வருகிறது.

இந்தக் காலத்தில் தனி மாந்தன் ஒருவன் தன் குடும்பத்தாரின் துணையால் மட்டும்-தன் ஊராரின் துணையால் மட்டும்-தன் நாட்டாரின் துணையால் மட்டும் வாழவே முடியாது. ஒல்வொரு தனி மாந்தனும் ஒழுங்காக வாழ உலகத்தாரின் துணைவேணடும்.அதாவது சமூகத்தின் துணை வேண்டும்.

மக்கள் ஒருவரோ டொருவர் ஒற்றுமை பூண்டு ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்து வாழ்வதே சமூக வாழ்க்கை. இத்தகைய சமூக வாழ்க்கையைப் பின்பற்றியதனால்தான், ஒருகாலத்தில் ஐவரைப் பற்றி மட்டும் அறிந்து கொண்டிருந்த மனிதன், இன்று ஐந்நூறு கோடியினரைத் தெரிந்து கொள்ளும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறான். இதனால் தான், பத்தாயிரம் கல் தொலைவிற்கு அப்பாலுள்ள மக்கள் ஒருவர்க் கொருவர் பண்டங்களைப் பரிமாறிக் கொள்ள முடிகிறது. இதில் மாந்தர் இன்னும் முழு வெற்றி பெற முடியவில்லைதான். இருக்கட்டும்! இந்த ஒன்றிய சமூக வாழ்க்கையாகிய ஒரே உலகக் கொள்கை, முன்பு திருவள்ளுவராலும் பின்பு வடலூர் இராமலிங்க வள்ளலாராலும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.