கருணைகரத் தொண்டைமான்
117
தருண மங்கையை மீட்பதோர்
நெறி தரு கென்னும்
பொருள் நயந்து நன் நூல்நெறி
யடுக்கிய புல்லில்
கருணை யங்கடல் கிடந்தனன்
கருங்கடல் நோக்கி
வருண மந்திரம் எண்ணினன்
விதிமுறை வணங்கி[1]
என்ற பாடலிலும், பரதன் கங்கை வேடனாகிய குகனுக்குத் தன் தாயை அறிமுகம் செய்யுங்கால் "கடுமையார் கானகத்துக் கருணையார் கலியேக"[2] என்ற தொடரிலும் 'கருணாகரன்' என்ற பெயரின்" பொருளை விளக்கிக் கூறுதலைக் காண்க. இவற்றை யெண்ணியே சயங்கொண்டாரும்,
இலங்கை யெறிந்த கருணா கரன்றன்
இசைவெஞ் சிலையின் வலிகேட்பீர்
கலிங்க மெறிந்த கருணா கரன்றன்
களப்போர் பாடத் திறமினோ[3]
என்று பாடியுள்ளார் என்று கொள்ளலாம். இருவரும் கருணாகரப் பெயருடையராயினும் ஒருவன் இலங்கையெறிந்தபுகழுடையவன்; மற்றவன் கலிங்கமெறிந்த புகழுடையவன்.
கருணாகரத் தொண்டைமான் பல்லவ அரச குலத்தைச் சார்ந்தவன்; தொண்டைமான் என்ற சிறப்புப் பெயர் பெற்றவன்; வண்டை என்ற ஊரின் தலைவன். இவ்வாறு சிற்றரசனாகத் திகழ்ந்த இவன்