இசை
510
இசை
(Interval) என்னும் பொருளும் உளது. ஆகவே சந்தர்ப்பத்தை யொட்டிச் சுருதி என்பது தொனியா அல்லது இடைவெளியா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
ஒரு ஸ்தாயியில் பல இடைவெளிகளும் பல சுரங்களும் உண்டு. இந்தச் சுரங்களில் சில தனியின்பமுள்ளவை; வேறு சில கூட்டின்பம் அளிப்பவை. ஒரே நீளமும், கனமும், குணமும், முறுக்குமுள்ள இரண்டு கம்பிகளை ஒரே மாதிரி இழுத்துக் கட்டி மீட்டும்போது ஒரேவித ஒலி உண்டாகும். AB, CD என்பன அப்படி
AB
△△
CFED
△△△
யுள்ள இரண்டு தந்திகள். CD என்ற தந்தியின் E என்ற மையத்தில் ஒரு குதிரையை முட்டுக் கொடுத்து,CE என்ற பாகத்தையோ அல்லது ED என்ற பாகத்தையோ மீட்டினால், அதில் ஏற்படும் ஒலி, முதல் ஒலியிலிருந்து மாறுபட்டாலும், அதோடு இனிமையாய் இணைந்திருக்கும். அதுபோலவே CE இன் மையமான Fக்கு அம் முட்டைத் தள்ளி வைத்து FD-ஐ மீட்டினால் உண்டாகும் ஒலிக்கும் முதல் ஒலிக்கும் ஒருவித இனிமை தரும் பொருத்தம் இருப்பதை உணரலாம். இப்படியே மூன்றிலொரு பாகம், ஐந்திலொரு பாகம், ஆறிலொரு பாகம். ஒன்பதிலொரு பாகம், பத்திலொரு பாகம், பதினாறிலொரு பாசம் என்று பாகம் பண்ணி ஒலித்துப் பார்த்தால், இரண்டிலொரு பாகம், மூன்றிலொரு
ஸ | ரி | க | ம | ப | த | நி | ஸ் | |
பண்டைக் காலம் அஹோபலர் வேங்கடமகி, சோமநாதர், ராமாபாத்தியர் கோவிந்தாச்சாரி பழைய கிரேக்க முறை வட இந்திய சுத்த சுரங்கள் |
I I I I I I |
10/9 9/8 256/243 16/15 9/8 9/8 |
32/27 6/5 9/8 9/8 81/64 5/4 |
4/3 4/3 4/3 4/3 4/3 4/3 |
3/2 3/2 3/2 3/2 3/2 3/2 |
5/3 27/16 128/81 8/5 27/16 27/16★ |
16/9 9/5 27/16 27/16 243/128 15/8 |
2 2 2 2 2 2 |
★ இதற்கு பதிலாக 5/8 எடுத்துக் கொண்டால் மேல்நாட்டு டயனிக் மேளம் கிடைக்கும்
சுத்த சுரங்களின் மாறுதல்கள்
பாகம், நாலிலொரு பாகம் குறைக்கப்பட்ட நீளத்தில் ஒலிக்கும் சுரம் முதல் சுரத்தோடு மிக இனிமையாகச் சேர்வதை அறியலாம். ஐந்திலொரு பாகம் குறைத்ததிலிருந்தும் ஒருவித இனிய தொனி ஏற்படுகிறது.
மேற்கூறியதுபோல் ஒரு ஸ்தாயியில் பற்பல இடைவெளிகளும் சுரங்களும் இருக்கலாம். இவைகளில் எந்தெந்த இடைவெளிகள் சங்கீதத்திற் கேற்றவை என்று தெரியவேண்டும். சுரங்களைக் கொண்டு இசையுண்டாக்குவது என்பது முதன் முதலில் சாமகானத்தில்தான் ஏற்பட்டதாகத் தெரிய வருகிறது. சாமகானத்தில் ஒரு ஸ்தாயியில் முதலில் 4 சுரங்களும், பிறகு 5 சுரங்களும், அதன்பிறகு 7 சுரங்களும் ஏற்பட்டன. இந்தச் சுரங்களுடைய ஸ்தானங்களை நிருணயித்திருக்கிறார்கள். இவ் விஷயத்தில் சற்றுக் கருத்து வேற்றுமையுண்டு. இந்த ஏழு சுரங்கள் சுத்த சுரங்கள் என வழங்கின. காலக்கிரமத்தில் சுத்த சுரங்கள் மாறுபட்டன. ஆனால் பண்டைக் காலச் சாமகானச் சுத்த சுரங்கள் கிட்டத்தட்டத் தற்கால கரஹரப்ரியா ராகத்தின் சுரங்கள்போல இருக்கின்றன. இந்தச் சுத்த சுரங்களிலேற்பட்ட மாறுதல்களை அட்டவணையில் காணலாம். இப்படி ஏழு சுரங்களமைந்த ஸ்தாயி சுத்த சப்தகம் என்ற பெயரில் விளங்கிற்று. சுரங்களுக்கு ஷட்ஜம் (ஸ), ரிஷபம் (ரி), காந்தாரம் (க), மத்யமம் (ம), பஞ்சமம் (ப), தைவதம் (த), நிஷாதம் (நி) என்று முறையே பெயரிட்டார்கள். பழைய தமிழ் நூல்களிலும் இந்த இடைவெளிகளைக் குறித்து விவரித்துக் கூறி, அவைகளுக்குப் பெயருமிட்டிருக்கிறார்கள். பார்க்க : இசைத்தமிழ்
இந்த ஏழு சுரங்களையும் ஆதார ஷட்ஜமாக வைத்துக்கொண்டு பார்த்தால் வேறு சில இடைவெளிகள் கிடைக்கும். மேலும் ஸ-ப, ஸ-ம இடைவெளிகளை அளவுபடுத்தி, ஒவ்வொரு சுரத்திலிருந்தும் வேறு பல சுரங்களை நிருணயிக்கலாம். இயற்கையில் சில சுரங்கள் இனிமை வாய்ந்தவையாகவும் இசைக்கேற்றவையாகவும் இருக்கின்றன. ஆனால் இவற்றில் சில மேற்கூறிய சுத்த சப்தகத்தில் (வட இந்திய சுத்த ஸ்தாயியில் தவிர) உட்படாமலிருக்கின்றன. அந்தரகாந்தாரம் ஓர் இயற்கைச் சுரம்; தம்புராச் சுருதியில் தானாகவே ஒலிக்கும். இருந்தாலும் அந்தச் சுரம் ஸ-ப, ஸ-ம முறையில் நேராகக் கிடைப்பதில்லை; 729/512 என்ற பின்னத்தை 64/45 ஆகவும், 1024/729 என்ற பின்னத்தை 45/32 ஆகவும் திருத்திக்கொண்ட பின்னரே 5/4 கிடைக்கிறது. அது இயற்கைச் சுரமாகையால் இத்திருத்தம் ஏற்புடையதாகும். பின்னால் தரப்பட்டுள்ள அட்டவணையும் இத் திருத்தத்தை ஒட்டி அமைந்ததே. பல முறைகளில் கிடைக்கும் இடைவெளிகளில் இந்திய சங்கீதத்திற்குரியதும், காதால் நிருணயிக்கக் கூடியதுமாக 22 இடைவெளிகள் இருப்பதாக நிச்சயித்திருக்கிறார்கள். அதற்குமேல் நுட்பமான இடைவெளிகளிருந்தாலும் அவைகள் தெளிவாகக் கேட்டு உணரக் கூடியவைகளல்லவாதலால் 22 இடைவெளிகள் போதும் என்று தீர்மானித்துள்ளனர்.
ஆதார ஷட்ஜத்தில் தொடங்கி, ஷட்ஜ-பஞ்சம, ஷட்ஜ-மத்யம முறையால் கிடைக்கும் சுரங்களைக் குறித்து ஆலோசிப்போம்.