இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது பொதுப்படையான தத்துவம். ஆகவே, தெய்வங்களின் பெயர் மாற்றங்களையோ, உருவத் திரிபுகளையோ மனத்தில் கொண்டு மயங்கித் திரிதல் வீண்செயல் என்பதே தத்துவ வாதிகளின் வாதமாகும்.
“வேடம்பல் கோடியோ ருண்மைக் குளவென்று
வேதம்புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீருண்மை என்றுகொள் வீரென்றவ்
வேதமறியாதே!
நாமம்பல் கோடியோ ருண்மைக் குளவென்று
நான்மறை கடறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீருண்மை என்றுகொள் வீரென்றே
நான்மறை கண்டிலதே!...”
இதோ, பாரதி சாட்சி நிற்கிறார்:
பாரதிக்குச் சாட்சியாக அமைந்திடும் உண்மையாளனின் கருணையும் அனுதாபமும் இந்த வாழ்க்கைக்கு வேண்டும். அவ்வாறு கைகூடி வந்துவிட்டால், அப்புறம். இந்தப் பூலோக வாழ்க்கை விளையாட்டுக்கு ஏற்படும் அந்தமும் ஆனந்தமும் தனிச்சிறப்புக்குரியன என்பதும் உண்மை!
நிறைந்தது.
64