பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

மலையிரக்க மடையப்பெண் மயில்தா னின்று
மதகரியை, விழ்த்துகிற மடங்க லேற்றை
வலையிறுக்கிப் பிடித்ததெனுங் கதையா யென்றன்
வாய்வாக்கு வலிமைதனை யிழக்க, வாய்த்த
கலையிரக்கப் படுமாறு கறைக மத்திக்
கட்டுண்டு விடச்செய்தாள். கற்றோர்க் குத்தம்
தலையிறக்க மடைவதிலும் கொடிய தான
தண்டனைவே றில்லையெனத் தவித்தே னேனும்.

அரிந்தஇளங் கொடியெனவே மேனி வாடி,
அரவிந்த மெனவிழிகள் சிவந்து வீங்கிச்
சரிந்தசுருள் கருங்கூந்தல் நுதல்மேல் வீழச்
சங்கெனச்செம் பவளஇதழ் வெளிர நின்று,
பரந்தமனத் திருந்தெழுதன் மானச் சீற்றப்
பார்வையெனைச் சட்டெரிக்கப் பதறி யேநான்,
விரிந்தகரம் நீட்டிமனம் கரைந்த ழைத்தேன்.
"விளக்கேவா விடிவுதர விரைந்திங்" கென்றே.

"சந்தித்ததாலுன்னைப் பொங்கி வந்த
சரிமகிழ்ச்சிப் பெருக்கினிலே வழிந்த நன்றிச்
சிந்தித்துச் செப்பவிலை யெனினும், மற்றுன்
செங்கையினா லதற்கெதிர்நீ செய்து தீர்த்தாய்!
நிந்தித்து மனமினியும்நெகிழ வேண்டாம்!
நேற்றுடனே அதுமுடிந்த கதையா கட்டும்!
வந்திந்தேன்; மன்னித்து மறந்து விட்டு
வழக்கம்போல் வாளன்றன் வாழ்வே." என்றேன்.

48