பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாளைக்கு மாணவரே நாட்டை ஆள்வோர் நம்கையில் எதிர்காலம் உளதே என்று நாளுக்கு நாளுணர்ந்து கடமை ஆற்றும் நல்லுணர்வே ஆசாற்கு வேண்டும் எண்ணம் வேளைக்கு வந்திருந்து காலம் பேணி - விஜனயின் மேற் கருத்துான்றி ஆசாற் போற்றி கேளிக்கை விடுத்தொழித்து மாண்பை ஆக்கக் கிளர்ந்தெழுதல் மாணவர்க்கு வேண்டும் எண்ணம்(0.டு) துன்புறுவோர் நிலைகாணின் துடித்துச் சென்று தோள் தந்து துயர்துடைக்கும் எண்ணம் வேண்டும் அன்பொன்றே நிறைகின்ற எண்ணம் வேண்டும் அரிவையர்க்கும் உரிமைதரும் எண்ணம் வேண்டும் என்பெறினும் நடுநிலைமை வழுவா எண்ணம் எல்லோர்க்கும் இனியசொலிப் பணியும் எண்ணம் முன்பிருந்த நன்றியுணர் வெண்ணம் வேண்டும் மொழிந்த இவை நாகரிக எண்ணம் என்பர் (Dசு) கல்லூரிக் கல்விசொலத் தமிழே வேண்டும் கஜலச்சொற்கள் தமிழ்மொழியில் ஆக்கல் வேண்டும் மெல்லோசைத் தமிழிசையே முழங்க வேண்டும் மேலுயர்ந்த கோவிலுளும் தமிழே வேண்டும் வல்லுருய் வருமொழிகள் இங்கு வேண்டா வடவருக்குத் தாள்பிடித்துப் பதவி ஏற்கும் நல்லோரே நூம்தாயை இகழ்ந்து கூறேல் ! நம்நாடு தமிழ் நாடாய் ஆதல் வேண்டும் (0.எ). 22