பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லைக்கோட்டில் கயலொடுவில் புலிக்கொடியை இமயத் துச்சி கட்டி அதன் எல்லைவரை தமிழர் ஆண்டு வியனுலகில் புகழ்நாட்டி வீர வாழ்வில் வியப்பூட்டி வாழ்ந்ததுவே தமிழ வாழ்வு; அயலவர்க்கு வேங்கடத்தைப் பறிகொ டுத்தும் ஆண்மையொடு வாய்விரம் பேசி நின்று செயலற்றுத் தேவிகுளம் பகுதி தந்து தேம்புவதே இன்றுள்ள தமிழ வாழ்வு; (கடு) இலக்கியத் துறையில் பாண் டியநன் னுட்டகத்துச் சங்கம் கண்டு பாவேந்தர் கோவேந்தர் ஒன்று கூடி ஈண்டு புகழ்த் தமிழாய்ந்து மொழியைப் பேணி இலக்கியங்கள் படைத்தது.முன் தமிழ வாழ்வு ; கூண்டிலுறு மொழியாக்கிக் கொடுமை செய்து குறை மதியர் காவலராய்க் கூடி நின்று வேண்டியதை இலக்கியமென் றெழுதிக் கொட்டி விளம்புவதே இன்றுள்ள தமிழ வாழ்வு (சுை) போர்த்துறையில் கைவேலைக் களிற்றின் மேல் பாய்ச்சி நின்று கடுகிவரும் வேழத்தை எதிர்க்க வேண்டி மெய்வேலைப் பறித்தெடுத்து நகைத்து நின்று மேவாரை வென்றதுதான் தமிழ வாழ்வு ; மெய்வீரன் ஒருவனுடன் எதிரில் நிற்க மிக நடுங்கி மரங்களிடை மறைந்து நின்று பொய்வீரங் காட்டுகிற புன்மை யெல்லாம் புகழ்மிக்க தமிழ் வாழ்வோ ? வேறு வாழ்வாம் (Dஎ) 74