பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

காஞ்சி வாழ்க்கை


அவர்களோடு நானும் வணங்குவேன். ஆயினும் அங்கேயும் என் ஆறுமுகனே காட்சி தருவான். இயேசுவின் வாழ்வினைப் பற்றிப் பத்துப்பாடல்கள் பாடி, அதை அப்போது வந்த ‘தமிழ்க்கலையில்’ வெளியிட்டேன். எத்தனைச் சமயங்களில் புகுந்து தேடினும் காணப்பெறும் ஈசன் ஒருவனே என்ற உண்மை எனக்கு அப்போது புலனாகும். அந்த அடிப்படையிலே கிறித்து பிறந்த நாள், கிறித்தவ ஆண்டுப் பிறப்பு முதலியவற்றையும் அவர்களைப் போன்று நான் வீட்டில் கொண்டாடுவதுண்டு. கிறித்தவ ஆண்டு முதல்நாளில் தேவார திருவாசகங்களைப் படித்து, அவற்றுள் நூலிட்டுத் தெளிவேன். அப்படி ஒராண்டு தெளிந்து பெற்ற விளைவை உடன் பின்னே காட்ட இருக்கின்றேன். இவ்வாறு கிறித்தவ அன்பர்தம் உறவால் அவர்தம் சமய நெறியை நன்கு கற்றுக் கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன். அப்படியே எனக்கு மகமதிய நண்பர் இரண்டொருவரும் அமைந்தனர். பெரிய காஞ்சிபுரத்தில் நகை வாணிபம் செய்து வந்த ‘பாட்சா’ என்பவரும், எங்கள் பள்ளியிலேயே உருது ஆசிரியராக இருந்த அன்பரும் உற்ற நண்பர்களாக இருந்தனர். அவர்களுடன் அவர்தம் சமயம் பற்றி ஆராய்வேன். திரு. பாட்சா என்பவர் பெரிய காஞ்சி மசூதி ஆட்சிப் பொறுப்பில் முக்கியப்பங்கு கொண்டவர். எனவே அவருடன் பலமுறை அந்த மசூதியில் சென்று அவர்தம் தொழுகையில் கலந்து கொண்டிருக்கிறேன். இவற்றுக்கிடையில் எங்கள் பள்ளியில் எழுத்தாளராக இருந்த திரு. தேவராசமுதலியார் அவர்களுடைய நாத்திகவாதப் பேச்சுக்களையும் கேட்டுக் கொள்வேன். அவருக்கு எப்படியோ இளமையிலிருந்தே-பெரியாரைப் பின்பற்றியதாலோ ஏனோ-அந்தக் கொள்கை ஊன்றிவிட்டது. ‘காஞ்சிப் பெரியார்’ என்றே நாங்கள் அவரை அழைப்பது வழக்கம். அவர் கொள்கையை மறுக்கும் வகையில் நான் பலப்பல வாதங்கள் புரிவேன். இப்படிப் பலசமய நெறிகளுக்கு இடையில் நான் என் சைவ சமய