இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயல் - 26
(“கொன்றை நாடு கொடுமை பொறுக்குமோ?
நன்றிதோ நன்றிதோ” என்று கெஞ்சினான்”)
இடம் கொன்றை நாட்டு அரண்மனை. |
உறுப்பினர் மாழைப் பேரரசு ஒள்ளியோன், தங்கவேல் |
கொள்ளாக் காதலொடு கொற்றவன் இருந்தான்
ஒள்ளியோனும் உடன் அமர்ந் திருந்தான்.
படையின் தலைவனோர் பாங்கர் இருந்தான்.
தடதடவென்று தங்கவேல் வந்து
“கிள்ளை என்மொழி கேட்கிலள்”, என்றான்
துள்ளி எழுந்து சொல்வான் மன்னன் :
“ஒள்ளியோய் நேற்றுமுன் உன்னை எதிர்த்துத்
துள்ளிய பலரையும் சுட்டிக் காட்டுக.
படையின் தலைவனே கடிதே அவர்களை
அடைக்க சிறையில். அதுவும் அன்றி,
வீட்டினின்று மக்கள் வெளிவரா மற்செய்,
கூட்டம் எங்கும் கூடா வகைசெய்.
77