கலித்துறை அந்தாதி சரணம் எப்போதும் கொக்கோக நூலே - வகுத்த இன்பமுறை தவறாமல் இணை அன்றில் போலே சப்ரமஞ்ச புட்ப அணை மேலே - சேர்ந்த . சையோக சுகத்தை அரை க்ஷணமும் மறந்தென் னாலே(தனித் . [த சாகித்தியங்கள் ; பதிப்பு 1885} இந்தப் பகுதியை இவரது சாகித்தியத்துக்கும் அதன் கருத்துக்கும் ஒரு மாதிரி' யாகக் கொள்ளலாம். என்றாலும், இந்தப் பகுதியை யெல்லாம் விட, வெளிப்படையாகவும் விரச மாகவும் உள்ள பத சாகித்தியங்களையும் இவர் இயற்றியுள்ளார் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். தெற்குப் புதுத் தெருவிலிருந்த சவுக்கைக்கு இனிய குரலில் நய மாகப் பாடும் சிங்கக்குட்டி என்ற சீனிவாச ராயர் என்பவர் வருவதுண்டு எனவும், அவர் தெலுங்கு, இந்துஸ்தானி, மராத்தி முதலிய மொழிகளிலுள்ள பதங்களைப் பாடுவது வழக்கம் எனவும், அவற்றைக் கேட்டு மகிழ்ந்த அழகிய சொக்க நாத பிள்ளை அந்த இசை வடிவங்களைப் பின்பற்றித் தமிழில் சில பாடல்களைப் பாடினார் எனவும் வெ, ப. சு, குறிப்பிட்டுள் ளார். அத்தகைய பாடல்களின் இனிமையைத் தம் கருத்தில் கொண்டு, அழகிய சொக்க நாத பிள்ளை காலமான சமயத்தில், தாம் முத்துசாமிப் பிள்ளைக்கு எழுதிய நிருபக்கவிகளில், ஆந்திரப் பதம்போல் இன்று என்பவர் வாய் அடைபடச் செந்தமிழ்ப் பதம்போல் ஆந்திரப் பதம் இன்று எனப் புரிந்திட்ட அழகிய சொக்க நாதக் கோ ... என்னா ஆந் திர. (தெலுங்குப்) பாடல்கள் போல் பிற பாடல்கள் இல்லை என்று சொன்னவர் வரய் அடைபடும் வீதத்தில்) செந் தமிழ்ப் பதப் பாடல்கள் போல் திறம்மிக்க' (ஆம்திரம் , ஆகிய உறுதியான பதம்) பாடல்கள் எனக் கூறச் செய் திட்ட அழகிய