44
காற்றில் வந்த கவிதை
கொட்டிப் போட்டால் சிவக்குமாம்
கோயிலுக்குப் போனல் மணக்குமாம்
எல்லாப் பெண்களும் வாருங்கோ
அரமணைத் திண்ணையில் சேருங்கோ
பாட்டிருந்தால் பாடுங்கோ
பணமிருந்தால் போடுங்கோ
இது காக்கைக் குஞ்சைப்பற்றிய நாடோடிப் பாடல். கரிக்குருவியைப் பற்றிப் பாடுகிற மற்ருெரு பாடல் உண்டு. அந்தக் குருவியோடு பேசுகிறமாதிரி பாட்டு.
கரிக்குருவி கரிக்குருவி எங்கெங்கே போனாய்?
காராள தேசத்துக்குக் கடவடைக்கப் போனேன்.
என்ன நெல்லுக் கொண்டு வந்தாய்
எனக்குச் சொல்ல வேணும்.
சம்பா நெல்லுக் கொண்டு வந்தேன்
சாதம் நல்லா வேகும்
சம்பா நெல்லுப் போட்டு வைக்கக்
கும்பக் குடம் வேணும்
கும்பக் குடத்துக்குக் காவலிருக்கக்
குழந்தைப் பையன் வேணும்
குழந்தைப் பையனுக்குப் பால் கறக்க
வறட்டெருமை வேணும்
வறட்டெருமைக்குப் பில்லுப் போடப்
பள்ளப் பையன் வேணும்
பள்ளப் பையனுக்குப் படியளக்க
ராஜா வள்ளம் வேணும்
ராஜா வள்ளம் தூக்கியுளக்கப் பூனக்குட்டி வேனும்