பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ix

எனக்கு இந்த நல்ல உடல் வளத்தை அருளிச் செய்துள்ளார். தொடர்ந்து எனக்காக மன்றாட்டுச் செய்யுங்கள்,' என்று கேட்டுக்கொண்டார். அப்பொழுதும் அவரது கிறித்தவக் கீர்த்தனம் நூலை விரைவில் வெளியிட எண்ணியிருப்பதாகக் கூறிவந்தேன். ஆனால், அகரமுதலி நிறைவடைவதற்கு முன்னர் அவருடைய வாழ்வு இவ்வுலகில் நிறைவடைந்து விட்டது. உலகத் தமிழ் மாநாட்டிற்கு நான் சென்ற நாளிலே, பேருந்து நிலையத்திலேயே அவர் நோயுற்ற செய்தியைக் கேள்விப்பட்டு, மதுரை அரசினர் மருத்துவ மனை யில் சென்று கண்டேன். அவர் என்னைப் பார்க்கும் நிலை யிலோ, பேசும் நிலையிலோ இல்லை. அமைதியாக அவர் அருகில் நின்று இயேசு பெருமானின் திருப்பெயரை முன் னிட்டு மட்றாட்டுச் செய்துவிட்டு மதுரையிலிருந்து விரை வாகவே சென்னை திரும்பிவிட்டேன். சில நாள்களுக்குள்ளே அவர் உயிர் உலகத்தைவிட்டுப்பிரிந்த செய்தி வந்துவிட்டது. கர்த்தாவே, மனிதனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல வென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்" (எரேமியா 10:23) என்பது திருவாக்கு.

பாவாணருடைய உயிர் இவ்வுலகத்தைவிட்டுப் பிரிந்த பின்னரே 'கிறித்தவக் கீர்த்தனம்' என்னும் அவருடைய பாடல் நூல் கிறித்துவில் அவர் கொண்டிருந்த பக்திக்கும் பற்றுமைக்கும் சான்றாக வெளிவரல் வேண்டும் என்பது இறைவரின் திருவுளச் சித்தமாகும் என்பது தோன்றுகின்றது.

கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் முன்னால் என்னிடம் கொடுக்கப்பட்ட இந்நூலின் இரண்டு அட்டைகளும் கிட்டவில்லை; நூற்பொருளுக்கு முற்பட்ட பக்கங்களும் கிட்டவில்லை. எனவே இது முதலில் எப்பொழுது பதிப்பிக்கப் பட்டது என்பது தெரியாத நிலையில் வேதாகம மாணவர் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவரும் முதல் பதிப்பு என்றே குறித்துள்ளேன்.