பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2

முத்தேவர்

நித்திய சீவனை முன் நி மலனாந் தந்தை தந்தார் குற்றவூண் மாந்தி மாந்தன் குற்று யிரானான் ஏசு நற்றவன் தசையிரத்தம் நன்மருந் துணவாய் நல்கச் சுத்தமா வாவியாரும் சுகம் பெற வீசினாரே.

திரியேக தேவன்

எங்கணும் நிறைந்த செல்வத் திறைவ னிலொரு கூறன்றோ கொங்கலர் நறுந்தண்டாராய் குமரனென் றுரைக்குந் [தெய்வம் அங்கவ ரிருவர் கொண்ட ஆவியே பரிசுத் தாவி தங்குமோ ஆவி யின்றித் தம்பிரான் வினையு முண்டோ !

அவையடக்கம்

பாட்டுடைத் தலைவ னந்தப் பரமனே யவனோர் காலும் கேட்டினை யடையா னாகக் கிளப்பதென் பொருத்த மின்மை நாட்டியல் வழுக் களைந்தும் நம்பனோர் பொருளாக் [கொள்ளான் காட்டுறப் பிழைக டோன்றாக் கல்வி நூலுலகத் துண்டோ !

உலகநேசர்க் குரைப்பது

எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

கவலைமிகு முலகியலோர் கனவாகி யுடம்புவிழும் கண்ணுவதேன் செல்வ போகம் அவ நிகழு மாசை! வழிச் சென்று திரு வடைந்தாரும் ஆசை யென எல்லைகாணார் பவநெறிசே ரெரிவிலகிப் பண்ணவனாங் கிறித்தேசு பாதார விந்தஞ் சேர்தி அவனி முழுதுடையானும் ஆன்மாவை யிழந்துறூஉம் ஆதாயம் யாதுமாதோ. 1. விருப்பம். 2. திசை.