பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

சரணம்

    வானிறப் புறாவின் வடிவாய்த் தூயாவி 
    வந்திறங்கித் தேவ மைந்தன் மேற்குலாவி 
    வானகப் பிதாவும் வாசக மொன்றேவி 
    வணங்குந் திரியேக திறம் மேவியே 

வதி-வழி (யோ )

    ஏசு சாத்தானால் சோதிக்கப்பட்டது 

'ப்ரோவ சமைய' என்ற மெட்டு பல்லவி

   வனமேவாசம் வானப்பிரதேசம்

அனுபல்லவி

    அணவுந் தேவேசும் ஆவி யுபதேசம் 
    உணரும் பிரகாசம் ஊழியப்பிரவேசம்

சரணம்

    உண்பதில் நாற்பானாள் உபவாச மேனாள் 
    உலகத்தே வானான் உன்ன தன்பாற் போனான் 
    தின் பொருளிலிச்சை தேவனைப் பரிட்சை 
    தீயபேயருச்சை தேறி யேசுரட்சை

(வ) 12 கானாவூர்க் கலியாணம் 'தாதாபாய் நவரோஜி' என்ற மெட்டு பல்லவி

     கானாவூர்க் கலியாணம் 
      கம்பீராதன சம்பாகோதனக்

சரணம்

    காணாது கந்த ரசம் 
    ஆனாவிருந்து நிசம் 
      ஆண்டவா அகம் ஈது குறையென 
      வேண்டினார் மிக ஏசு பரமனை

(கா) (கா)