இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
________________
14
அனுபல்லவி
தருமபோதனே பெருந் தவ விநோதனே அவ தாரநீ யென்னில் சேர நான் ஒரு தகவில் லாதவன் ஏதும் (ப)
சரணம் கோரமென்றன் வேலையாள் திமிர் வாத வேதனை கூறு மீண்டோர் வார்த்தை வினைஞன் குணமே பூரணம் வேறும் வேண்டுமோ என்றான் வீரர் நூறுபேர் எந்த வேளையும் வந்து போவாரே பிறர் வியஞ்செய்வேனுமே ஏவப் இல் வீடு
17
விதைக்கிறவன் உவமை நொண்டிச்சிந்து கேளீர் உவமையொன்று முடியக் கிளக்கும் வரையும் உள்ளக் கிளர்ச்சியுடன் விதைக்கும்படி யுழவன்-ஒருவன் விதைகளெடுத்துக்கொண்டு விரைந்து சென்றான் விதைக்கும் பொழுது சில - விதைகள் விழுந்தன புறமான வழியருகே பறவை பலவந்தே - அவற்றைப் பட்சித்தன முழுவதும் நட்டமாகவே கற்பாறை நிலத்து - விதைகள் கடிதில் முளைத்தன மண்காணாமல் வெயிலேறின போதோ- அவைகள் வெந்து கருகினவே வேரின்றி முள்ளாரிடம் விழுந்த-விதையும் முளைக்கமுள் வளர்ந்ததை நெருக்கினதே பண்ணார் நன்னிலத்து - விதைகள் பத்தும் நூறுமாகப் பெரும் பலன் தந்தன