பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

 

18
காற்றையுங் கடலையு மதட்டினது.
'மருகேலரா' என்ற மெட்டு.
ஜயந்த
ஸ்ரீ ஆதி
பல்லவி

சரணாகதி சார்ந்தேம் பதீ

அனுபல்லவி


சரணாவதாரீ சருவாதிகாரீ
புயன் மோதிவாரி பொரும் ஆதரி (ச)

சரணம்


கன்னிகை குமார கண்டிறந்து பாரே
மன்னுகல மூட மலிதரங்கமையா
இன்னே மடிகின்றோம் என்னவே பன்னிருவர்
அந்நிலை கடிந்தாய் அலைமாருதம் (ச)

 

19
ஐந்தப்பங்கொண்டு ஐயாயிரவரைப் போஷித்தது.
'அமரநபிமாரெ' என்ற மெட்டு.
பல்லவி

மனமுருகுந் தனி மாலை வனாந்தரம்

அனுபல்லவி


ஜனம் பெருகும் இனிச்சால முகாந்தரம்
தினகரனே செலத் தீவிரமாந்தரம் (வ)

சரணம்

1மாஜனம் போகியே மருங்கு கிராமம் முன்
போஜனம் நாடவே புகன்றனர் சீடரும் (ம)
2போக வேண்டாமவர்க்குப் புது விருந்திடு மென்றே
ஈகையாண்டவர் கூற இருமீனைந்தப்ப மென்றார். (ம)
3ஐம்பதைம்பது பேராய் அமர்த்தியனைவரையும்
ஐந்தப்ப மிருமீனை ஐயன் ஆசீர்வதித்தார். (ம)
4போதியவரை யுண்டு புடைக்க விலாவினூடே
மீதிய துணிக்கையும் மிகுத்த பன்னிரு கூடை (ம)
பெண்ணே பிள்ளை தவிரப் பெருவிருந்துண்டவர்கள்
எண்ணிலையாயிரவர் இருந்ததாகக் கண்டனர். (ம)