பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

 

சிலுவைச் சிந்து.

கிறிஸ்துவின் பாடுகளும் மரணமும்
26

இராப்போஜனம். கெத்செமனேத்தியானம்
'என்னடி நான்பெற்ற மங்கை' என்ற மெட்டு.

பண்டிகையின் முதல் நாளை
மாலை வேளை
தம தாளை-ஏலிப்
பட்டினத்தில் ஒரு கேளை - அளி
பஸ்கா கொண்டாட வுன்
விஸ்தார வீடெனப்
பக்ஷமா யேசுவுங் கேட்டார்—உடன்
சித்தமே செய்தனர் வீட்டார்.

உங்களிலொருவன் இரவே
என்னைக் கரவே
காட்டித் தரவே- நேரும்
உண்மை யென்றார் ஏசு குருவே - பஸ்கா
உண்ணும் சீடர் துயர்
நண்ணி நானோவென்று
ஒவ்வொரு பேராகக் கேட்கும்-போது
உன்னதன் யூதாசைக் காட்டும்

ஏசுவேயப்பத்தை யெடுத்தார்
ஆசிப்படுத்தார்
பிட்டுக்கொடுத்தார்- இதோ
என்றன் உடலென்று நொடுத்தார். பின்னர்
ஏனங்கொண்டென் ரத்தம்
பானம் பண்ணுமென்றே
எத்தித்தரச் சீடர் மடுத்தார்-உடன்
எல்லாரும் ஒலிவத்தடுத்தார்