பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

 

34
மாதர் புலம்பல்.
'மேரே மெளலா' என்ற மெட்டு.


பாதார விந்தமே பாவியின் சொந்தமே
நாதா பணிந்தமே நம்பியிருந்தமே
நானிலத்தும் மேனிலத்தும் நாதனே நல்வேதனே
ஈனரைப் போல் எனுனக்கே எல்லை யில்லா வேதனை

என்னோ கொடுமையீ தெங்கணு முள்ளதோ
முன்னோர் கனவிலும் முன்னின தில்லையே
பாதகப் பகைவர் பல பந்தமாய்நிர்ப் பந்தமாய்க்
கோதில்லா மெய்க்கோ வுனையுங் கொல்லமனம் வந்ததோ

குற்றமில்லாமலே கொல்லவும் நீதமோ
கொற்றவனாணையும் கொல்லுவார் போதமோ
ஆணிகைகாலேறி ரத்தம் அருவியாய்ப் பாய்ந்தோடுதே
மேனியெல்லாம் மாறித்தாகம் மிஞ்சி முகம் வாடுதே

ஐயோ இத்தொல்லையை ஆரிடஞ் சொல்லுவேன்
மெய்யே இப்புல்லரை மேதினி கொள்ளுமோ
வாரடிகள் வீங்கியந்தோ வரைவரையாய்த் தெரியுதே
வாதை யெங்ஙன் ஆற்றுவாயென் வயிறுபற்றி யெரியுதே

வல்லோரைத் தெய்வமும் வருத்த வில்லையே
பொல்லா விரோதிகள் புத்திர முள்ளதே
தேகமெல்லாம் நோவு மீறித்தியங்கி நீ கலங்கவும்
ஆகடியமாய்ப் பலரும் அவதூறு முழங்கவும்

தேவா இவ்வேளையோர் திக்கு மில்லாமலே
ஆவா நீ போகமுன் அக்கர மானதோ
பாவிகளுக்காகவேயிப் பாரில் பாடு பட்டவா
காவகச் சிலுவைமீது கதறியாவிவிட்டவா

கல்லேயெனாதகம் கையறும் வேளையும்
வல்லே யறாதினும் வைகுமென் ஆவியும்
ஏசையா உன் இன் முகத்தை என்றுநான் கண்டாறுவேன்
இன்னல்வாரியின் நடுவில் எங்ஙன்கரை யேறுவேன்.