பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அனுபல்லவி
உலக முண்டானது முதலாய் உங்கட்கமைந்த அரசுற (வ)
சரணம்


நானோ பசிதாகம் பிணி ஆனேன் அயலெனினும் போனக
பானாதிகள் உவந்தளித்த பாரோப காரிகணீர் (வ)

 

50
இடதுபக்கத்தார்க்குச் சொல்வது.
'எதுட நீ' என்ற மெட்டு.
பல்லவி

இதொடேக இடவீர் ஏது மின்றி
ஏற்றீர் சாபமே

அனுபல்லவி


இதிதன் தூதரோடிறங்கவே யமைந்த
இறுவா யில்லெரி ஏகி வேமினே (இ)

சரணம்


தரா தலமுனமென் சிறார் பசிமிகவே
பரா முகமிருந்து தரா துணவுடைகள்
உறாநொதுமல் பிணி யறா நிலை சிறையில்
வரா திருந்ததென்? அபராதிகளே சொலும் (இ)
இதி=சாத்தான்.

 

51
ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம்.
இராகம் - காம்போதி.தாளம் - ஆதி.

மழவர் மிகுந் தேவசேனை மகிமையுடன் கூடிமண
முழவறைந்தார் திசைகளெல்லாம் முழங்கிடவே யீருலகும்
விழவயரு மென்றேயொரு விளம்பரமுஞ் செய்ததென்னே
அழகுயரும் ஆட்டுக்குட்டி யானவர்க்கே கல்யாணம்

பரமபதந் தனைவிட்டுப் பாரின்மிக ஏழையாகிச்
சிரமமுடன் பாரந்தாங்கிச் சிரஞ்சாய்க்க இடமின்றி
மரமதிலே மடலேறி மணமகளை மீட்டெழுந்த
அருவரனாம் ஆட்டுக்குட்டி யானவர்க்கே கல்யாணம்.