பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

திக்கற்ற பாவிக்குத் தெரிப்பது
எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.

பாங்கரும் பொருளும் மற்றுப் படிவமு மில்லை யென்றே
ஏங்கியிங் கிருக்கும் பாவி யெழுமனக் கிளர்ச்சி யோடே
நீங்குமோர் பாவி மீளின் நின்மலன் தூத ரெல்லாம்.
தாங்கரும் பேரா னந்தத் தாண்டவ மாடி நின்றார்.

புறமதத்தார்க்குப்புகல்வது

வானத்தின் கீழே யெங்கும் வணங்குதற் குரிய தெய்வத்
தானத்தில் ஏசுவல்லால் தழுவுறப் பிறிதொன் றுண்டோ
மேனித்த வீடு சேர மிகுபல நெறிக ளில்லை
நானத்த முயிர்மெய்யென்றார் நம்பனா ருலக த்தீரே
அத்தம் = வழி உயிர் = ஜீவன் மெய்=சத்தியம்.

குமரற் பரவல்
கொச்சக ஒரு போது

1பாவிகளை மீட்டருளப் பாரேழை யாகிச்
சேவடியுஞ் சிவத்துளையச் சேணடந்து நாளும்
ஓவறஊ ழியஞ்செய்த உன்னதனாம் ஏசு
தேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திறமிருந்துங் கேளாதார் செவியென்ன செவியே.

2சிரந்தானுஞ் சாய்க்கவிடஞ் சிறி துமின்றி யெங்குங்
கரந்தாள்மெய் கண்ணுயிர்வாய் கருதியவர்க் கீந்து
பரந்தேதன் பகைவர்வரப் பருவம்வரு முன்னே
கரந்தானைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்விழித்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்ணே.

3மடந்தீரப் பலவுரைத்து மாநிலத்திற் சுற்றிப்
படர்ந்தாடும் படவரவு பாதாளஞ் சாவு
கடந்தானைப் பன்னிருவர் கண்டஞ்ச நீர்மேல்
நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே
நசரேய நமவென்னா நாவென்ன நாவே.

2