பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






மார்ச் 22


என்னை மனிதனாக்கு, இறைவா!


இறைவா, நான் பிறப்பால் மானிடனே. ஆனால், இயல்பில் விலங்காயினேன். என்ன இறைவா! நான் விலங்கல்லவா? மனிதனேதானா? இல்லை. மனிதனும் இல்லை. விலங்கும் இல்லை. விலங்குகளில் கூட யானை, கிளி, நாய், பசு போன்றவை பயனுடையன. சிறப்புடைய பண்பாடுடையன. ஒழுங்குடையன, நன்றி பாராட்டும் இயல்பின. ஆம் இறைவா, என்னிடத்தில் ஏது ஒழுங்கு மனம் போன போக்குத்தான். இந்த உடல் எனக்குக் கருவியாக இல்லை. நான்தான் உடலுக்குக் கருவியாகிவிட்டேன். இந்த உடலுக்கே உழைக்கின்றேன்.

என்னிடம் ஏது நன்றி. உனது அருட்கொடைகளை நினைத்துப் பார்ப்பதில்லை. பொருளுடைய நின் புகழை நான் பாடுவதில்லை. யாருக்கும் பயன்பட்ட வாழ்வும் வாழ்ந் தேனில்லை. இறைவா! மன்னித்து விடு.

எனது உடம்பை இளைக்கச் செய்து வருகின்றேன். அது இளைத்துவிடும். நீ உள்ளொளி பெருக்கிவிடு! என்னைக் காப்பாற்று. என்னை முதலில் நல்ல விலங்காக்கு, பின் மனிதனாக்குக! பின் நின் திருவருளிலேயே தங்கியிருக்க அருள் புரிக!