பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

381





டிசம்பர் 30



நீ பெரியோன்! வள்ளல்! அதற்கேற்ப அருள் செய்க!

இறைவா, நான் உனக்கு அடிமை! ஆயினும் உன்னுடைய அருளை யாசிக்கின்றேன்! அன்பிலே, உவகையின் முகட்டிலே நிற்கும் பொழுதெல்லாம் என்னை இழக்கின்றேன். இந்த நிலையில் அறிவும் கை கொடுப்பதில்லை.

இறைவா, அறியாமைச் சூழ்நிலையில் நான் அனா சாரமான காரியங்கள் பலவற்றைச் செய்கின்றேன். இறைவா, உனக்கு உவப்பில்லாதனவாகவுள்ள காரியங்களையும் செய் கின்றேன். இறைவா! இவையெல்லாம் நான் வேண்டும் என்று செய்வதில்லை! அறியாமையினால் செய்கிறேன்.

இறைவா என் சிறுமை கருதிப் பொறுத்தருள் செய்க! நான் என் பிழைகளைத் திருத்திக் கொள்ள முயல்கின்றேன்! நீயும் என்னைப் பிழைகளிலிருந்து மீட்பாயாக!

இறைவா! நான் அறிவில்லாதவன் என்ற உண்மையை அறிந்தே என்னை ஆட்கொண்டனை! நான் அறியாப் பதங்களைத் தந்தருளினை! இன்று என் பிழைகளைக் கண்டு சீறலாமா? அல்லது பாராமுகமாய்த்தான் இருக்கலாமா? ஒருகாலும் கூடாது.

இறைவா, எங்கள் நாட்டில் பிழுக்கையை நீக்கி பாலைக் கொள்வர். மணல் ஒட்டிய கனிகளை ஊதித் தூய்மை செய்து உண்பர்! இறைவா! அங்ங்னமே நான் உனக்கு!

இறைவா, நான் உன் அடிமை. என் பிழைகளைத் தவிர்த்து என்னை ஆட்கொண்டருள்க! நீ பெரியோன். அதற்கேற்ப அருள் செய்க!