இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
316
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
இணைந்து வாழும் பிணைந்து வாழும்; அவைகளுக்குள் ஒன்றுக்கொன்று முரண்பாடே வராது.
வளர்ந்த அறிவியல் மேதைகள், அருளியலைக்கண்டு வாழ்த்துகிறார்கள். அருளியலிலே வளர்ந்த மேதைகள், அனுபவத்திற்கு உரியனவாயிருக்கின்ற விஞ்ஞானத்தைக் கண்டு வாழ்த்துகிறார்கள். இணைத்தும் பிணைத்தும் வாழ்வதிலேதான் அமைதியும், சமாதானமும் ஆக்கமும் இருக்கிறது. அங்கேயே ஆன்மாவிற்குச் சாந்தியும் ஏற்படுகிறது. ஆறுதலும் ஏற்படுகிறது.