பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

141



திருஞானசம்பந்தர் லட்சார்ச்சனை பூர்த்திவிழா, திருமுறை விழா, திருமுறை வகுப்புத் தொடக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றன. சீகாழி வட்டாரத்தில் எண்ணத்தக்க பெருமையுடைய மனிதர்கள் அனைவரும் வந்திருந்தனர். மக்கள் கூட்டமும் அதிகம். மாலைச் சிற்றுண்டி அளிக்கும் பணியில் திணற வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. ஊழியர்கள் போதவில்லை! ஒரு கட்டத்தில் ஷராப் சீனிவாச ஐயங்கார், மற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் இலையை எடுத்து இடத்தைச் சுத்தம் செய்தார். இந்தக் காட்சி கந்தசாமித் தம்பிரானின் நெஞ்சைத் தொட்டது! இப்பிறப்பில் மட்டும் அல்ல, எப்பிறப்பிலும் சீனிவாச ஐயங்கார் பணி நினைவி லிருக்கும்! வழிகாட்டும்!

மகாசந்நிதானம் எழுந்தருளி அருமையான வாழ்த்துரை வழங்கினார்கள். அந்த நாள்முதல் திருஞான சம்பந்தர் திருக்கோயில் மேலும் மேலும் அழகுபெற்று வருகிறது. இப்போது திருஞானசம்பந்தர் திருக்கோயிலில் நல்ல நூலகம் ஒன்று அமைந்துள்ளது. இவை மட்டுமா? இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சீகாழியில் ஆண்டுதோறும் நடைபெறும் திருமுலைப்பால் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று அருளாட்சி செய்யும் தருமபுர ஆதீனம் மகாசந்நிதானம், திருமுலைப்பால் திருவிழாவை மிகவும் சிறப்பாக பக்தி சிரத்தையுடன் நடத்திவருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் விளைவாக கந்தசாமித் தம்பிரா னுக்குத் திருமுறைத் தமிழின்பால் ஆர்வம் மிக்குயர்ந்து வளர்ந்தது.

15

குன்றக்குடி ஆதீனகர்த்தர் கந்தசாமித் தம்பிரானை விட்டபாடில்லை! மீண்டும் அணுகினார்கள். இப்போது திருக்கடவூர் கனகசபை பிள்ளை, ஆற்றங்கரை முத்தையா