பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

255



சென்று சேர வேண்டுமோ அவர் முகவரியை எழுதி, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பெற்ற எந்த அஞ்சற் பெட்டியில் போட்டாலும், அஃது உரியவருக்குச் சென்று கிடைப்பது போல, இறைவனுக்குச் செய்யும் நோக்கத்தோடு இறைவனின் அங்கீகாரம் பெற்ற மக்கட் சமுதாயத்திற்குச் செய்யும் சேவை இறைவனையே சென்று சேரும். இவ்வாறு செய்வதால் மக்கட்கும் இறைவனுக்கும் சேவை செய்த இருவகைப் புண்ணியங்கள் கிடைக்கும்.

ஆடு மேய்ப்போனும்-ஆதீன கர்த்தரும்

ஆடுகளை மேய்ப்பவன் அவற்றை நாய் நரிகள் தின்ன விட்டு விட்டு ஆட்டிடையன் மட்டும் பத்திரமாகத் திரும்பி வந்தால் அவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம்? அது போல, மக்கட் சமுதாயத்தின் அருள் வேட்கையைத் துண்டி அவர்களது ஆன்மாவை வளர்க்க வேண்டிய ஆதீன கர்த்தர்கள் சமுதாயத்தைப் பிற சமய நெறிகளுக்கும் வறுமைக்கும் ஆளாகும்படி விட்டு விட்டு, அவர்கள் மட்டும் வாழ்ந்தால் அதை என்ன என்று கூறுவது?

* * *

கோயிலுக்குச் செல்லும் வழியில், நடைபாதையில் பளுவான-பெரிய பட்டியல் கற்கள் பதிக்கப் பெற்றிருந்தன. அவற்றில் ஒரே ஒரு கல் மட்டும் தன் நிலையிலிருந்து மேலே எழும்பி, நடப்போரின் கால்களைப் பதம் பார்த்த வண்ணம் இருந்தது. ஒரு நாள் தவத்திரு அடிகளார் அவர்கள் அந்தக் கல்லைக் காண நேர்ந்தது. உடனே அந்தக் கல்லைப் பெயர்த்தெடுத்து மீண்டும் பதிக்கும்படி கட்டளையிட்டார்கள். ஆறேழு வேலைக்காரர்கள் கனத்த கடப்பாறைகளின் துணை கொண்டு அந்தக் கல்லை மிகவும் சிரமப்பட்டுப் பெயர்த் தெடுத்தார்கள்! என்ன வியப்பு உள்ளே சுமார் ஒன்றரை முழம் நீளமுள்ள-கடப்பாறை போன்ற பருமனுள்ள ஒரு