க ச ட் சி க ள் 267
முரம்பு கண் உடைய எகி, கரம்பைப் புது வழிப் படுத்த மதியுடை வலவோய் ! இன்று தந்தனே தேரோ - நோய் உழந்து உறைவியை நல்கலானே?
-பேயனர்
280. கார் வந்தது.கவலை பிறந்தது !
“மேகம் இடிக்கிறது. மழை பெய்கிறது. பிச்சிப் பூ மலர் கிறது. இவை கண்டு நான் மருளவில்லை’ என்றாள் அவள்.
‘பின் எதற்குக் கலங்குகிறாய் ?”
‘அவரை நினைத்துத்தான்’
எஏன் ?”
‘கார் காலம் வந்துவிட்டதே. காதலி வருந்துவாளே என்று எண்ணிச் சென்ற காரியம் முடியுமுன்பே வந்துவிடப் போகிருரே! என்றுதான் வருந்துகிறேன்’ என்றாள்.
பெருந் தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே; யானே மருள்வென் ?-தோழி!-பாள்ை இன்னும் தமியர் கேட்பின், பெயர்த்தும் என் ஆகுவர்கொல், பிரிந்திசினேரே ?அருவி மா மலைத் தத்தக் கருவி மா மழைச் சிலைதரும் குரலே.
-கதக்கண்ணன்
381. இரவு வருகிறதே! என்ன செய்வேன்?
“பகலின் எல்லே சென்றது. மாலே வந்தது. முல்லை மலர்ந் தது. சூரியனின் வெம்மை தணிந்தது. மாலையைக் கண்டு எவ் வாறு சகிப்பேனடி தோழி? அதன் பிறகு இரவு வருகிறதே.