க ச ட் சி க ள் 277
என்றதும் பார்க்க வருகிறேன்’ என்கிருன். இவளும் ஆசை யுடன் அழைக்கிருள். அவனல் நேர்ந்த துன்பத்தை யெல்லாம் மறந்துவிட்டாளே! அடேயப்பாl கஷ்டம் கஷ்டம்! இப்பேர்ப் பட்ட உயர் குடிப் பிறப்பது மிகக் கஷ்டம்’ என்று கூறிள்ை. காலை எழுந்து, கடுங் தேர் பண்ணி, வால் இழை மகளிர்த் தழிஇய சென்ற மல்லல் ஊரன், எல்லினன் பெரிது’ என, மறுவரும் சிறுவன் தாயே; •. தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே.
-ஆலங்குடி வங்களுர்
289, இங்கு முண்டு! அங்கு முண்டு !
“ஏன் இப்படி யிருக்கிறாய்?’ என்று கேட்டாள் அவள்.
‘ஒன்றுமில்லை. கவலேதான்” என்றாள் தோழி.
‘'என்ன கவலே உனக்கு?’’
‘உன்னைப் பற்றித்தான்’
“என் சீனப் பற்றி என்ன கவலை?”
“எப்படி நீ பொறுப்பாயோ?”
எதை?’’
‘உன் காதலன் பிரிவை”
‘பிரிந்து சென்றால் என்ன? நீண்டநாள் தங்கிவிடவா போகிறார்?’
“இல்லை. இருந்தாலும் சீக்கிரம் திரும்பி வரவேண்டுமே!’
“வருவார்! வருவார்! அதோ பார்! அது என்ன?”
“குருவி’
- எப்பேர்ப்பட்ட குருவி?’
‘சாம்பல் கிறச் சிறகு கொண்ட குருவி”
‘'எது போன்ற சிறகு?’
‘அல்லிப் பூவின் புற இதழ் வாடிற்ை போன்ற கிறங் கொண்ட குவிந்த சிறகு”
- குருவி என்ன செய்கிறது?’