கா ட் சி க ள் 345
போகிறேன்’ என்று உறுதி செய்து கொண்டாள் அவள். கார ணம் ? காதலன் மீது கோபம். கலியாணம் செய்யவில்லை. சும்மா வருகிருன் ; போகிருன். எவ்வளவு நாள் ? இதுதான் கோபம் அவளுக்கு.
மனதைத் திடமாக்கிக் கொண்டாள். முகத்தை உம், மென்று வைத்துக் கொண்டாள்.
அவன் வந்தான். ‘கண்ணே!’ என்றான் : கட்டி அகணத்தான். ‘ஆருயிரே!” என்றாள். ஆனந்தம் கொண்டாள்; மகிழ்ச்சி. சிறிது நேரம் முன்பு அவள் கொண்ட மன உறுதி எங்கே? “பாழும் நெஞ்சே ! உனக்கு எத்தனமுறை சொல்வேன் ! அவனேக் கண்டதும் மறந்து போகிருயே?’ என்று கூறினுள் அவள். மெல்லிய, இனிய, மேவரு தகுந, : k இவை மொழியாம் எனச் சொல்லினும், அவை ,ே மறத்தியோ வாழி - என் நெஞ்சே! - பல உடன் காமர் மாஅத்துத் தாது அமர் பூவின் வண்டு வீழ்பு அயரும் கானல் . தெண் கடல் சேர்ப்பனைக் கண்டபின்னே ?
-அமமூவன
381. சொன்னுல் என்னவாம் ?
“ஏன் இப்படி வருந்துகிறாய்?” என்றாள் தோழி.
“மாலே வந்துவிட்டது. பொழுதும் மயங்கி விட்டது. பறவை கள் ஒழிக்கின்றன. மலர்கள் குவிந்தன. கடற்கரையிலே உள்ள சோலேயும் தனிமை பெற்றது. நானும் தனிமை பெற்றேன். வருந்துகிறேன்.
‘வருந்தாதே! வருந்தாதே 1 என்று என்னிடம் சொல்கிறார் களே தவிர, வருந்துகிருள் என்று அவரிடம் போய்ச் சொல்வார் எவருமில்லேயே’ என்றாள் அவள்.