44 கு று ங் தொ ைக க்
செய்கிருனே! உன்னே வரைந்து போகவில்லையே என்று சொன் னேன். அவ்வளவுதானே!’
“நான் ஒன்றும் மட்டமாகக் காதல் செய்துவிடவில்லை. அதை நினைவில் வைத்துக்கொள்’
“சரி. உயர்வாகவே இருக்கட்டும்’ “ஆம், உயர்ந்ததுதான். வானினும் உயர்ந்தது; நிலத்தினும் பெரியது. கடலேவிட ஆழமானது எனது காதல். மலேநாட னுடன் நான் கொண்ட காதல் அப்பேர்ப்பட்டது. சுலபமானது என்று எண்ணி விடாதே. அவன் வருவான். வரைந்து செல் வான்’ என்றாள் அவள். நிலத்தினும் பெரிதே’ வானினும் உயர்ந்தன்று! நீரினும் ஆரளவின்றே சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு பெருங்தேன் இழைக்கும் நாடனெடு நட்பே.
-தேவகுலத்தார்
- *
18. ம ைழ யு ம் மண் பானை யு ம்
“இனிமேல் இரவு நேரத்தில் வராதே’ என்றாள் தோழி.
“ஏன்?’ என்றான் அவன்.
ரொம்பக் கஷ்டம்’
என்ன கஷ்டம்?’’
‘யாராவது கண்டு கொண்டால்......”
என்ன செய்வான்! பாவம் மனம் வருந்தின்ை. வருந்தி யவன் சிந்தனையில் ஆழ்ந்தான். அவனது பார்வை பக்கத்திலே சென்றது. என்ன கண்டான்? சுடப்படாத பச்சை, மண்பானே கள் கண்டான். அவை எப்படி யிருந்தன? மழை பெய்ததாலே கரைந்து இருந்தன.
அதைக் கண்டதும் அவனுக்கு என்ன தோன்றியது? தன் கிலேயும் அந்த மண்பானே போன்றதே என்று தோன்றியது.
“இரவு வராதே’ என்ற சொல் கேட்ட உடனே அவனது உள்ளம் இடிந்தது. எது போல?
மழையிலே உடைந்து போன பச்சை மண் பானை போல.