56 கு று ங் தொ ைக க்
இந்த இளைப்புக்குக் காரணர் அவர் அல்லர். என் மனே கிலேதான் ‘ என்று வேண்டிக் கொள்கிருள்.
‘மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள் கொடியோர்த் தெறு உம்’ என்ப யாவதும் கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்; பசைஇப் பசங்தன்று, நுதலே; ஞெகிழ ஞெகிழ்ந்தன்று, தட மென் தோளே.
-கபிலர்
30. இரவும் வரவும்
“ இனிமேல் அவன் இரவு நேரத்தில் வருவான்’ என்றாள் தோழி.
- ஐயோ! இரவிலா ?’ என்றாள் அவள்.
s ஆம்
- நமக்குப் பழி வருமே !’
‘ வந்தால் வரட்டுமே!’
- ஐயோ! எனக்குப் பயமாயிருக்கே !’’
“ என்னடி பயம் ? அவன் வரும் வழி எப்பேர்ப்பட்டது ? சிங்கத்துடன் எதிர்த்துச் சண்டையிடும் யானே. பிறகு ஒய்வு கொள்ளும். அப்படிப்பட்ட வழியிலே வருகிருன். அப்படித் துணிந்து வரும்போது நாம் அவனை ஏற்காமல் இருக்கலாமா ?”
- சரி. பிறகு உனது விருப்பம்’
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன், சிறு கண் பெருங் களிறு வயப் புலி தாக்கித் தொல் முரண் சொல்லும் துன் அருஞ் சாரல், நடு நாள் வருதலும் வரூஉம் : வடு காணலமே-தோழி!-நாமே.
-மதுரைக் கதக்கண்ணன்