86 கு று ங் தொ ைக க்
57. கள்ளியின் உள்ளம்
‘ஏனடி தோழி, நீதான் சொன்னல் என்ன ?”
- ar 6ffl 2**
“அவரிடம்’
‘உன் காதலரிடமா?’’
“ஆமாம்!”
“என்ன சொல்ல வேண்டுமென் கிறாய் ?”
‘யானையும், புலியும், செந்நாயும் திரிகின்ற இந்த மலைச் சாரலிலே தனியாக ஏன் இந்த இரவு நேரத்திலே வருகிறார்?’’
‘வரவேண்டாம் என்று சொல்லவா ?”
“ஆமாம்!”
‘பிறகு எங்கே வர ? என்று கேட்டால்......”
‘அம்மாதான் தினைப்புனத்தில் காவல் இருக்கச் சொல்வி விட்டாளே!’
‘அப்போ! அங்கே வரச் சொல்லவா?’’
“ஆமாம்” ‘வளை வாய்ச் சிறு கிளி விளை தினக் கடீஇயர் செல்க’ என்றாேளே, அன்னை என, நீ சொல்லின் எவனே?-தோழி-கொல்லே நெடுங் கை வன் மான் கடும் பகை உழந்த குறுங் கை இரும் புலிக் கொலே வல் ஏற்றை பைங் கட் செங்காய் படுபதம் பார்க்கும் ஆர் இருள் நடு நாள் வருதி, சாரல் காட, வாரலோ எனவே.
-மதுரைப் பெருங்கொல்லன்
58. சுழலுதே! மனம்!
கண்டான். காதல் கொண்டான். அவளும் இணங்கிள்ை. இருவரும் இன்பம் துய்த்தனர்.
‘நேரமாயிற்று; வருகிறேன்’ என்றாள். போய்விட்டாள்.