பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

23



கொள்ளலாம். இந்த முட்டாள்தனம் அதிகரித்திருப்பதி னாலேயேதான், வெளிநாட்டானாகிய பார்ப்பானுக்கு அடிமைப்பட்டிருக்க நேர்ந்துவிட்டது. இவ்வடிமையிலிருந்து விடு பட வேண்டுமென்று பேருழைப் பெடுத்து , நம் நாட்டு நியாயக்கடவுளாகிய பகவான் புத்தர் போதித்த சம தர்மத்தை எல்லாரும் எளிதில் அறிந்து, உண்மையான பிராமணன் யார்? அந்த பிராமணன் நமக்கென்னத்திற்குள் இந்தியர் கடைத்தேற வேண்டுமானால் பாரசீக தேசத்தான்தானா பிராமணன் என்று வரவேண்டும்? இந்தியாவில் பிறந்த கருப்பு மனிதர்கள் பிராமணராகாமல் போனதென்ன? அவர்கள் ராக்ஷசரானதற்கு யார் காரணம்? என்றறிவதோடு பாரசீகர்கள் பிராமண நிலை எதுவென்றும், இந்தியர்கள் பிராமண நிலை எதுவென்றும் இந்நூலில் தெரிந்து உண்மையைக் கைக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.


ஸ்ரீ சித்தார்த்தா புத்தகசாலையார்.
கோலார் தங்கவயல், ஆண்டர்சன்பேட்டை,
புத்தம் 2475, ஆங்கீரச - மாசி மீ.