பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பிராமண மதமே படுகுழி.


சகோதர ஐக்கியத்தைத் தடுப்பது பார்ப்பனர் மதம். இந்தியருக்குள் ஜாதியை புகுத்தியது பிராமணர் சூழ்ச்சி. இந்தியரைத் தாழ்த்தி தாங்கள் உயர்ந்தவர்களென்று படாடோபங் காட்டி வைத்தது ஆரியர் வேதம், சில நீச்ச வம்ஸத்தார்கள் இந்துக்களானார்களென்று எழுதி வைத்தது வேதியர் கர்வம். ஒரு பெரிய குலத்தினரைத் தங்களுள் சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கியிருப்பது பிராமணீய குருட்டுத்தனம். எல்லா இடங்களிலும் நேரங்களிலும், அவர்கள் உயர்ந்தவர்களென்று நாமஞ் சாற்றுவது வேதியர் மார்க்கம், ஜீவகாருண்யமற்று மனிதர்களை வதைப்பது இரு பிறப்பாளர் முறைமை. பெண்களைத் தலை எடுக்காமல் நசிப்பது பாரசீகர் கட்டளை. இந்தியாவில் கோவில்களைக் கட்டி அவைகள் மூலம் விபசாரம் உண்டாக்குவது பிர்ம மதம். கல்சாமியைக் கும்பிட லஞ்சம் வாங்குதல் பார்ப்பனர் கடமை. காணமுடியாத சாமியைக் கண்டு வந்தவர் போல் செய்து வைத்தது வேஷ பிராமணர் கொள்கை. மோக்ஷ கபாடத்திற்கு அதிபதிகளென் றபோர் வேஷ பிராமணர்கள். செத்தவர்களுக்கு தானியங் கொண்டு போகின்றோமென்று ஏமாற்றுகிறவர்கள் வேஷ பிராமணர்கள். இந்திய தேச நியாயவாதிகளாகிய பவுத்தர்களை கழுவிலேற்றிக் கொன்றது வேஷ பிராமணீயம். இந்தியர்களை வதைத்து பிராமணர்களை வளர்க்கச் செய்பவர் வேஷ பிராமணர்கள். கடவுள் பார்ப்பான் ரூபமாக வருவார் என்றுரைப்போர் வேஷபிராமணர்கள். நாங்களே இந்தியா வுக்கு தெய்வமென்போர் வேஷபிராமணர்கள். அவசியமற்ற வேதியர்களை இந்தியாவுக்கு வேண்டுமென்போர் வேஷ பிராமணர்களே! வேஷ பிராமணீயத் தாலேயே இந்திய மக்கள் நசுங்குண்டு வருகின்றார்கள். ஆகையால் பகுத்தறிவை வளர்த்திப் பாருங்கள். நியாயவாசகன்