130 சோழர்
உரைசால் சிறப்பின் முாைசு ஒழிந்தனவே! பன்னு றடுக்கிய வேறுபடு பைஞ்ஞரிலம் இடங்கெட ஈண்டிய வியன்கட் பாசறைக் களங்கொளற்கு உரியோர் இன்றித் தெறுவா உடன் வீழ்ந்தன்றால் அமரே பெண்டிரும், பாசடகு மிசையார், பனிநீர் மூழ்கார்; மார்பகம் பொருந்தி ஆங்கமைக் தனரே; வாடாப் பூவின் இமையா காட்டத்து நாற்ற உணவினேரும் ஆற்ற அரும்பெறல் உலகம் நிறைய விருந்து பெற்றனரால் பொலிக நும்புகழே' (புறம்: சுஉ)
களம்பாடிப் பரிசில் பெற்றுக் களித்துச் செல்லும்
விருப்புடன் வந்தவன் நான்; களிறு பெற்றுச் செல்ல எண் னின் அவையெல்லாம் பெய்யும் பெருமழையைத் தாங்கி கிற்கும் மலைகளைப்போல், வீமர் ஏவிய அம்புகளைத் தாங்கி அழிந்து வீழ்ந்து விட்டன; கொடிஞ்சியொடு கூடிய நெடிய தேர்களைப் பெறலாம் என எண்ணின், காற்றெனக் கடிது ஒடும் குதிரைகள், களம் முழுதும் வளைத்து வளைத்து இழுத்து ஒடியதால், நிலை தளர்ந்து, வலியிழந்து, முறிந்து சிதறி கிலத்தே வீழ்ந்து அழிந்து விட்டன; கொய்யப் பெற்ற பிடரியினேயுடைய குதிரைகளைக் கொடுக்கக் கொள் ளக் கருதின், வீரர் தம் வாள் தந்த புண்கள், உடலெலாம் விளங்க, காற்றின் இயக்கம் அற்ற கலங்கள் ஆடாது, அசை யாது கடலிடை சிற்பதேபோல், குருதி வெள்ளத்தில் வீழ்ந்து விட்டன; இவ்வாறு, பெறுதற்காம் பொருள் எதை யும் பெறமாட்டாமையால் உள்ளத்தே மகிழ்ச்சி அற்ற புலவர், வாழும் வகையறியாது வாடுவாராயினர்! அந்தோ! அவர் சிலை என்னே!” எனக் களத்தின் கொடுங்காட்சி கண்டு கண்ணிர்விட்டுப் புலம்புவர் கழாத்தலையார்:
'களிறு முகந்து பெயர்குவம் எனினே,
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போலக்
கைம்மா எல்லாம் கணையிடத் தொ?லந்தன;
கொடிஞ்சி நெடுந்தேர் முகக்குவ மெனினே,