20 பெண்பாற் புலவர்கள்
. * பெருந்தேர் யானும் ஏறியது அறிந்தன் றல்லது, வக்தவாறு கனியறிந் தன்ருே இலனே ;......... மெல்லியல் அரிவை இல்வயின் கி.மீஇ *இழிமின்’ என்றரின் மொழிமருண் டிசினே : வான்வழங் கியற்கை வளிபூட் டினையோ ? மானுரு வாககின் மனம்பூட் டினையோ ? உாைமதி : வாழியோ வலவ.” (அகம்: -அச}
மழை பெய்துவிட்ட நிலத்தில் தேர்உருளே ஒடிய வழியே, நீர் விரைந்து ஒடுவது ஊர்ந்துசெல்லும் பாம்பு விரைந்து பாய்வதுபோலும் என உவமை காட்டுவதும்,
'தண்ணில மருங்கில் போழ்ந்த வழியுள் கிரைசெல் பாம்பின் விாைபுர்ே முடுகச் செல்லும் நெடுந்தகை தேர்.' (அகம்: க.உச)
மாலை வர்துற்றலும், வேலியைக் கடந்துவரும் காட்டுப்பூனே யால், தன் பார்ப்புகளுக்கு ஏதம் உண்டாதலும் கூடும் என அஞ்சிய கோழி, அவற்றை ஏமம் சேர்ந்த இடத்திற். குக் கூட்டிச்செல்லுமாறு, கவலையோடு பலகால் கூவி அழைக்கும் எனக் கூறிச் சிற்றுயிர் மாட்டும் உளவாம் நற். முய் அன்பினேப் புலப்படுத்துவதும் போற்றற் குரியவாம்.