பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

நந்தி–நந்தியாவட்டம்
எர்வட்டாமியா கோரோனேரியா
(Ervatamia coronaria,Stapf.)

குறிஞ்சிப்பாட்டில் (91) கபிலர் கூறும் ‘நந்தி’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘நந்தியாவட்டப் பூ’ என்று உரை கண்டார். நந்தியாவட்டம் ஒரு புதர்ச்செடி.பல்லாண்டு வாழும் இயல்பிற்று.

சங்க இலக்கியப் பெயர் : நந்தி
பிற்கால இலக்கியப் பெயர் : நந்தியாவட்டம், நந்தியாவர்த்தம்
உலக வழக்குப் பெயர் : நந்தியாவட்டை, வலம்புரி
தாவரப் பெயர் : எர்வட்டாமியா கோரோனேரியா
(Ervatamia coronaria,Stapf.)

நந்தி இலக்கியம்

குறிஞ்சிப் பாட்டில் கபிலர் இதனை ‘நந்தி’ என்று குறிப்பிடுகின்றார்.

“நந்தி நறவம் நறும்புன் னாகம்-குறிஞ். 91

‘நந்தி’ என்பதற்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘நந்தியா வட்டப் பூ’ என்றார். பிங்கலம்,

“வலம்புரி நந்தியா வர்த்த மாகும்[1]

என்று கூறி வலம்புரி என்னும் இன்னொரு பெயரையும் இதற்கேற்றும். இதன் மலரின் அகஇதழ்கள் ஐந்தும் அடியில் இணைந்திருப்பினும் மேலே மடல் விரிந்து ஒன்றிற்கொன்று நந்தாமல் வலப்புற வட்டமாக அமைந்துள்ளமையின் ‘நந்தியாவட்டம்’


  1. பிங். நி. 2951