பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

முஞ்ஞை–முன்னை
பிரெம்னா லாட்டிபோலியா (Premna latifolia,Roxb.)

சங்க இலக்கியங்களுள் புறநானூற்றில் காணப்படும் ‘முஞ்ஞை’ என்பது ஒரு புதர்ச் செடி. இதன் அடித்தண்டு வலியது. இதன் இலைகளை உணவாகக் கொள்வதுண்டு. இவை நல்ல மருந்தாகப் பயன்படும்.

சங்க இலக்கியப் பெயர் : முஞ்ஞை
பிற்கால இலக்கியப் பெயர் : முன்னை
உலக வழக்குப் பெயர் : முன்னை, மின்னை, முன்னைக் கீரை, பசுமுன்னை
தாவரப் பெயர் : பிரெம்னா லாட்டிபோலியா
(Premna latifolia,Roxb.)

முஞ்ஞை–முன்னை இலக்கியம்

முஞ்ஞை என்னும் புதர்ச் செடியைப் பற்றிப் புறநானூற்றுப் பாடல்கள் மட்டும் கூறுகின்றன.

“இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
 குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு
 புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம்”

-புறநா. 197 : 10-12
“முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி
 பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்”

- புறநா. 320 : 1-2
“தாளிமுதல் நீடிய சிறுநறு முஞ்ஞை
 முயல் வந்து கறிக்கும் முன்றில்
 சீறூர் மன்னனைப் பாடினை செலினே”
-புறநா. 328 :14-16