பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

இப்படி ஈந்தபோதும் தான் இன்னான் எனத் தன்னை இயம்பிக்கொள்ளாமையாலேயே இவனது மனப்பண்பின் மாண்பு புலனாகிறது. வலக்கையால் ஈவது இடக்கைக்கும் தெரிதல் கூடாதென இக்காலத்தில் கூறப்படும் உணர்ச்சி, இற்றைக்கு ஏறக்குறைய இரண்டாயிர ஆண்டுகட்கு முன்பே நம் நாட்டில் நிலவியது என்பதை நாம் அறிந்தபோது பெருமகிழ்வு கொள்ள வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

இங்ஙனம் ஓரி ஈயத் தாம் பசி தணிந்தனர். அதற்கு மேல் ஆடலை மறந்தனர். ஆடலை அகற்றும் இந்நிலைக்கு அவர்களைச் செய்தவன் ஓரியே யாவான். இவன் ஈகை வாழ்க.