பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓய்வு நேரம்



"எனக்கு ஓய்வு ஏது, இதற்கெல்லாம்--அங்கே நரம்பு முறிய வேலை வாங்குகிறான்-அலுத்துப் படுத்தால் கட்டை போலாகி விடுகிறேன் --நான் போகவில்லை, கூத்துப் பார்க்க"--என்று கூறும் பாட்டாளி--"நமக்கு ஓய்வு கிடையாது--ஆறு மாதத்துக் கணக்கு இன்னும் எழுதி முடித்தாக வேண்டும் ஒரு வரத்திலே" என்று கூறும் எழுத்து வேலைக்காரர், நிரம்பியுள்ள சமுதாயத்திலே, 'ஓய்வு நேரம்' ஆராய வேண்டிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. நமது நாட்டிவே சமூக, பொருளாதார அமைப்புகள் மாறிக்கொண்டு வருகின்றன--நல்ல விதமான வளர்ச்சி ஏற்பட்டால், 'ஓய்வு நேரம்' உண்மையிலேயே, கவனிக்கப்படவேண்டிய பிரச்சினையாகிவிடும்--தக்க திட்டங்கள்கூட தீட்டவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும். இப்போது முன்னணியிலே இருக்கும் பிரச்சினைகளை எப்படி வாழ்க்கையை நடத்துவது என்பதாகவே, பெரும்பாலான மக்களுக்கு இன்று இருக்கிறது.

எப்போது பார்த்தாலும், ஏதாவது வேலை செய்தபடி இருப்பவர்களையும் காணலாம்--வேலை ஏதும் செய்யாமல் பொழுதை ஓட்டுபவர்களையும் காணலாம். வேலை ஏதும் செய்யாமலிருப்பவர்கள் எல்லாம் ஓய்வாக இருக்கிறார்கள். என்று கூறிவிட முடியாது. வேலை ஏதும் கிடைக்காததால் அப்படி உள்ளவர்களே ஏராளம்.

'ஓய்வு கேரம்'--வேலை கிடைத்து அதிலே ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வேலை நேரம் போக, மிச்சமிருக்கும் பொழுது வேலை செய்யும் நிலையில் இல்லாதவர்களின் 'காலம்' ஓய்வு அல்ல--அது ஓய்யாரம். வேலை கிடைக்காததால் வேலை செய்யாது இருப்பவர்களுக்கு கிடைத்திருப்பது 'ஓய்வு' அல்ல திகைப்பு, வேலை செய்யும்