பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


வத்தை நெறிக்கவும், கையை விரிக்கவும், முடுக்காக நடக்கவும், மக்களின் உரிமையை நசுக்கவும் முனைந்தால், மக்கள் மனவேதனையடைவர். அந்த வேதனையைத் தீர்த்துக் கொள்ளவும், அதிகார வெறி கொண்டோரை அடக்கவும், அடுத்த தேர்தல் வரட்டும் வரட்டும் என்று கூறிக்கொண்டு, நாள் எண்ணிக்கொண்டு இருந்து, அடுத்த தேர்தலின்போது, ஆளவந்தார்களை வீட்டுக்கு அனுப்பிட மக்களுக்கு அதிகாரமும் வசதியும் இருக்கிறது--மக்கள் ஆட்சியில்.

ஆனால் இதற்கு, பொதுப் பிரச்சினைகளில் கவலை செலுத்தும் பண்பு வேண்டும். உள்ளென்று வைத்துப் புறமொன்று பேசாத உயர் குணமும், அச்சம் தயைதாட்சணியத்துக்குக் கட்டுப்பட்டுக் கடமையை மறந்து விடாதிருக்கும் ஆற்றலும் வேண்டும். இவைகளை எல்லாம் விட மிகமிக முக்கியமாகத், தங்கள் எண்ணத்தையும் கவலையையும் வேறு பக்கம் திருப்பி விட்டுவிடக் கூடிய பிரசாரத்தை நம்பி, அதற்குப் பலியாகிவிடாத, பண்பு வேண்டும்.

திறமை மிக்க ஓவியக்கலைஞன், திரையில் தீட்டிய தீங்கனி குலுங்கும் மரத்தின் காட்சியைக் கண்டு உயிர்ப்பறவை மயங்கி, கனியை அங்கு வட்டமிடும் காட்சிப்போல, தந்திரமான பிரசாரத்தால் மயங்கிடும் மனப் பான்மை பொது மக்களிடம் இருக்குமானால், மக்களாட்சிக் காலத்தில், சாதுர்யக்காரர்கள் சர்வாதிகாரமும் பெறமுடியும். சுதந்திரத்தைக் கேலிக் கூத்தாகிவிட முடியும். ஆகவேதான் இந்நாட்களிலே, மக்களின் சுதந்தர வாழ்வுக்குச், சிந்தனைத் தெளிவுதான் மிகவும் அடிப்படையாகத் தேவைப்படுகிறது.

ஆடு மாடுபளை விற்பதுபோல, மனிதர்களை அடிமைகளாக விற்றுவந்த கொடுமை நிரம்பிய காலத்தையும். சவுக்கு கொண்டு அடித்து, இரும்புச் சங்கிலிகொண்டு பிணைத்துத் தொழுவத்தில் கட்டிப்போட்டு அடைத்து வேலை வாங்கிவந்த. வேதனை நிரம்பிய காலத்தையும். இம்மென்றால் சிறைவாசம். ஏனென்றால் வனவாசம் என்று ஆர்ப்-