155 "எல்லா மார்க்கமும் கேட்டு நன்றல வாயினும் நான்மாறு உரைக்கிலேன். பிறந்தமுற் பிறப்பை எய்தப் பெறுதலின் அறிந்தோ ருண்டோ எனகக் கிருத்தலும்' -27/77-80 என்று கூறுவதால் காட்டுவர். அதையும் மறுத்த பூத வாதிக்கு மறுபடியும் மணிமேகலை, 'நின் தந்தை தாயரை அனுமானத் தாலலது இந்த ஞாலத்து எவ்வகை யறிவாய்? மெய்யுணர் வின்றி மெய்ப்பொருள் உணர்வரிய ஐயம் அலது இது சொலப் ருெய்' -27/283-287 என வாயடக்கி, அவன் கொள்கையை வீழ்த்துவ தறிகிருேம். இக் கருத்தினை இதே நூலில் மற்ருே.ரிடத்தில் துவதிகன் வாயிலாக அறிகிருேம். துவதிகன் மணிமேகலை யின் எதிர்கால வாழ்வை உணர்த்துகையில், அவள் வஞ்சி மாநகர் சென்று சமயக் கணக்கர் தம் திறம் கேட்பதைக் கூறும்போது (21 / 88 - 113) நன்கு விளக்குகிருர். 'இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் அறனே டென்னை' என்றறைந்தோன் தன்னை பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த நறுமலர்க் கோதை எள்ளினை நகுதி எள்ளினை போலும் இவ்வுரை கேட்டிங்கு ஒள்ளிய துரையென உன்பிறப்பு உணர்த்துவை "ஆங்குகிற் கொணர்ந்த அருந்தெய்வ மயக்க, காம்பன தோளி களுமயக் குற்றனை" என்றவ னுரைக்கும் இளங்கொடி நல்லாய் 'அன்று' என்று அவன்முன் அயர்ந்தொழி வாயலை "தீவினை உறுதலும் செத்தோர் பிறத்தலும் வாயே' என்று மயக்கொழி மடவாய்” –21/108-118