இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பூனை இப்படி எண்ணியதே.
புலிபோ லாக நினைத்ததுவே.
பானை, சட்டி யாவிலுமே,
பாய்ந்து, உடைத்து நொறுக்கியதே!
ஆட்டம் போட்டு வீட்டினையே,
அதிரச் செய்தது, புலிபோலே.
பாட்டி அங்கே வந்திடவே,
பாய்ந்தது, அவளின் மீதிலுமே!
பாட்டி கோபம் கொண்டனளே.
பக்கம் கிடந்த துடைப்பத்தால்,
போட்டாள், பூனை தலைமேலே,
பொத்'தென உதைகள், புத்திவர.
25