இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
224
சிலம்பின் கதை
'உலகு', 'நிலம்', 'பார்' என்பன ஒரே பொருள் குறிப்பன.
- “உலகிற்கு ஓங்கிய திருமாமணி”
என்கிறாள் சாலினி,
- “நீள் நில விளக்கு”
என்கிறான் கோவலன்.
- “பார் தொழும் பத்தினி”
என்கிறான் சேரன் செங்குட்டுவன்.
கவிஞர் எடுத்தாளும் சொற்கள் பொருள் பொதிந்தன வாக உள்ளன. அணிகள் கவிதைக்கு அழகு சேர்க்கின்றன.
- “சிந்தை செல்லாச் சேண்நெடுந்துரத்து
- அந்தமில் இன்பத்து அரசாள் வேந்து”
என்று பெருமிதத்தோடு இளங்கோவடிகள் தம்மைப் புலப்படுத்திக் கொள்கிறார். இவர் ஒரு துறவி, கலைஞர், கவிஞர் அறிஞர்; புலவர்; இவற்றோடு அறப்பிரச்சாரகரும் ஆவார்.
“மூன்று நாடுகளுக்கும் உரிய கதை, அதைச் சொல் வதற்கு அவர்க்குத்தான் தகுதி உள்ளது” என்று சாத்தனார் கூறுகின்றார். அரசு பற்றிய செய்திகள் இக்காவியத்தில் பெரும்பங்கு இடம் பெறுகின்றன. அவற்றை அறிந்தவர் ஒரு பேரரசராக இருக்க வேண்டும். அவர்களைப் பாரபட்ச்