பதுமையார் இலம்பகம்◊115
“அதுவும் நம்மைப்போலத்தான்; வேட்கை தீரவில்லை” என்றான்.
ஊர் புதிது; உற்ற துணைவி புதிது; உணவு புதிது; அவை ஒவ்வொன்றும் புதிது புதிதாக இருந்தன பாரதியின் கவிதைகளைப் போல.
இடைவேளை, ஒரு நாள் வெளியே இளநீர் பருகிவிட்டு வந்தான்.
“ஏன் எங்குச் சென்றிருந்தீர்?’ என்று கேட்டாள்.
“ஒருவருக்கு நான் கடன் பாக்கி; அதை முடித்து வந்தேன்” என்றான்.
“நன்றிக்கடன்; முதன்முதலில் எனக்கு எதிர்ப்பட்டவள் ஒருத்தி; அவளைப் பார்க்கத்தான் வந்தேன்; நீ கிடைத்தாய்”
“நல்ல சகுனம்; சுமங்கலியா?”
“அவளைச் சுமங்கலியாக்க முயன்றேன்; சுகம்மட்டும் தந்தேன்.”
“யுகம் வரை பேசலாம்; விளக்கிச் சொல்லுங்கள்”
“தேசிகப்பாவை அவளோடு பேசிவிட்டுச் சொல்லி விட்டு வந்தேன்.”
“என்னிடம் ஏதோ மறைக்கிறீர்கள்”.
எல்லாப் பெண்களும் பேசுவதுபோல அவளும் பேசினாள்.
“உரைக்கின்றேன்; ஒரு நாள் கூத்து; அவ்வளவுதான்”
“இது?”
“எங்கள் ஊரில் இது சகஜம், சீவகன் தெரியுமா? அவனும் அப்படித்தான்; அநங்கமாலையோடு கொஞ்சம் தொடர்பு உண்டு; பாவம் அவள் அவனுக்காகவே ஏங்கிக் கொண்டிருக்கிறாள்; அவன் ஊரை விட்டுப்போய்