குணமாலையார் இலம்பகம்◊91
“அரசயானை யாயிற்றே அதை எப்படி அவன் தொடலாம்”
“மதம் கொண்டது; எங்களால் அடக்க முடிய வில்லை”
“இதற்கு நீங்கள் எப்படிச் சம்மதித்தீர்கள்”
“நாங்கள் உயிருக்கு அஞ்சி அந்த இடத்தை விட்டு நீங்கி வெகுதூரம் போய்விட்டோம், அவன் ஏதோ யாரோ ஒரு பெண்ணை ஆசைப்பட்டிருக்கிறான்; அவள் அந்த வழியாக வந்து கொண்டிருந்தாள்”
“உருப்படி நன்றாக இருந்ததால் வளைத்து உம்மிடம் சேர்க்க அசுவனி நினைத்தது; இவன் தடுத்துவிட்டான்”
“இது இராச துரோகம்; அவனைக் கட்டிப் பிடித்து வாருங்கள்” என்று படைத் தலைவர்களுக்கு ஆணையிட்டான்; பக்கத்தில் இருந்த அவன் மைத்துனன் மதனன் தக்க படையுடன் கந்துக்கடன் இல்லம் நோக்கிச் சென்றான்.
புகை படிந்த கண்ணோடு நகை அணிந்த அந் நங்கை நல்லாள் சோறு சமைத்துப் பரிமாறிக் கொண்டு இருந்தாள். புதுப் புடவை என்றும் பாராமல் அதிலேயே கையைத் துடைத்துக் கொண்டு அதனைக் கரியாக்கிக் கொண்டாள்; நெருப்பைத் தீண்டியதால் சூடு வேறு பட்டுக்கொண்டது; தானே துழந்து அட்ட தயிர்க்குழம்பை அவனுக்கு ஊற்றிப் பரிமாறிக் கொண்டு இருந்தாள்.”
“இது மிகவும் சுவைக்கிறது” என்றான்.
“இது நானே சமைக்கிறது” என்றாள்.
அவள் முகத்தில் எழுந்த முறுவல் கண்டு அவன் முகம் நுட்பமாக மலர்ந்தது.