பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霍巴 சுரதாகவிதைகள்

கண்ணாலே பேசாமல் பேசு கட்டிக்

கற்கண்டே பூச்செண்டே கரும்பே' என்றான். பெண்பறவை விழியாலே பேச லானாள்.

பேரழகன் கொக்கோகம் கற்றுக் கொண்டான்.

物 亨 續

கண்ணாடி வாசலைப்போல் இருக்கும் கண்கள்

காதலிலே ஈடுபடும் நேரந் தன்னில்

வெண்தாழம் பூவாகும். அன்பு காட்டும்

வேளையிலே வெள்ளிநிலா விளக்கு ஆகும்.

- இதழ்: இலட்சியவாதி (15-5-1958)

எண்ணில் பிறப்பது கணக்கு இருவர் கண்ணிலும் நெஞ்சிலும் பிறப்பது காதல்.

狩 教 態

கண்ணைப்போல் சிறந்ததொரு உறுப்பு இல்லை: கண்ணைப்போல் சிறந்தகடல் உலகில் இல்லை; கண்ணைப்போல் சிறந்ததொரு அழைப்பும்

sł}; கண்னைப்போல் சுடும்.நெருப்பு வாசல் இல்லை.

- இதழ் இலட்சியவாதி, (15.5.1958 .